• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    அத்தியாயம் - 27

    பகலிரவு பல கனவு – 27 நேற்று வரை வெறும் படுக்கை அறையாக இருந்த அந்த விசாலமான மாடி அறை இன்று முழுமையான வீடாக மாறி இருந்தது. வெளியே வானம் கருமை பூசிக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் மாறி மாறி வந்தது. எங்கோ மழை நின்றுவிட்டது என்பதன் அறிகுறியாக ஈரமான மண் வாசனை காற்றில் மிதந்தது. கீழே பெரிய...
  2. S

    அத்தியாயம் - 26

    பகலிரவு பல கனவு - 26 பல நாட்கள் கழித்து தனது தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தான் பிரபாகரன். வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சியின் முதல் படியாக அன்று அதிகாலையில் எழுந்து தோட்டத்திற்கு வந்துவிட்டான். தென் மேற்குப் பருவமழை தேனியில் தனது முதல் சாரலைத் தூவிக் கொண்டிருந்தது...
  3. S

    அத்தியாயம் -25

    பகலிரவு பல கனவு - 25 பிரபாகரனின் தினசரி வாழ்க்கை காலை ஐந்து மணிக்கே தொடங்கிவிடும். இரவு பத்து மணிக்கு முன்னால் வீடு வந்து சேர்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. பதினெட்டு வயதில் இருந்தே கடினமாக உழைத்து முன்னேறியவன். நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தவன், அவனது கடைகளின் எண்ணிக்கை கூடியதில் கால்களில்...
  4. S

    அத்தியாயம் - 24

    பகலிரவு பல கனவு -24 கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் தற்செயலாக கடிகாரத்தின் மீது படிந்தது. அது காலை முடிந்து பகல் வரப்போகிறது என்று காட்டியது. சற்று நேரமாகவே வயிறு, என்னைக் கவனி என்று கூப்பாடு போடத் தொடங்கி இருந்தது. நேற்று சாயங்காலம் குடித்த...
  5. S

    அத்தியாயம் -23

    பகலிரவு பல கனவு -23 அசையாது அதே இடத்தில் நின்றான் பிரபாகரனன். அவனது முகம் பாறையாக இறுகி இருந்தது. அருகில் நின்ற சம்யுக்தாவின் நிலையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம். நேற்று வரை கண்ட கல்யாண கனவெல்லாம் இன்று கானல் நீராகிப் போனதில் செய்வதறியாது திகைத்து நின்றாள். “டேய் பேராண்டி! என்னத்துக்கு...
  6. S

    அத்தியாயம் -22

    பகலிரவு பல கனவு -22 “அட! இரண்டு பேரும் என்ன இங்கேயே நிக்கிறீங்க?” கேட்டுக் கொண்டே அண்ணனின் அருகில் வந்தாள் மலர்விழி. இருவரும் பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தனர். “அங்கே என்ன தெரிகிறது?” என்று வடிவேலுவை மிமிக்ரி செய்து பார்த்தவளுக்கு மௌனம் தான் பதிலாகக் கிடைத்தது. “ஹலோ! என்ன நக்கலா? நிலா காயுறதா...
  7. S

    அத்தியாயம் - 21

    பகலிரவு பல கனவு -21 பிரபாகரனும் சம்யுக்தாவும் தங்கள் கல்யாண சாப்பாட்டை வெறித்துக் கொண்டிருந்தனர். முதல் நாள் ரிசப்ஷன் முடிந்து இருவரும் படுக்கையில் விழுந்த போதே அடுத்த நாள் வந்து விட்டிருந்தது. அதிகாலை முகூர்த்தம் என்பதால் இரண்டு மணி நேர தூக்கம் கூட இல்லாமல் எழுந்து பியூட்டிஷியனிடம் தலையைக்...
  8. S

    அத்தியாயம் - 20

    பகலிரவு பல கனவு -20 சம்யுக்தாவும் அவளது அண்ணனும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இருவரது பேச்சும் வரம்பு மீறிச் செல்வதை அறிந்தும் பெற்றோர் தடுக்க முயன்றும் முடியாமல் போனது. “ஒரு மனுஷனை நேரிலயே பார்க்காமல் அவன் இப்படித்தான் இருப்பான்னு எப்படி முடிவு பண்ணலாம். நீயெல்லாம் சைக்காலஜி...
  9. S

    அத்தியாயம் - 19

    பகலிரவு பல கனவு -19 சரண்யா சென்று பல நிமிடங்கள் கடந்தும் மூவரும் வாய் திறந்து எதையும் பேசவில்லை. பெற்றோர் பேசுவார்கள் என்று சம்யுக்தா இருக்க, பாரதி கணவர் பேசுவார் என்று அவரைப் பார்க்க கண்ணனின் சிந்தனையோ எங்கோ இருந்தது. இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவின் மனதில் சின்சான்...
  10. S

    அத்தியாயம் - 18

    பகலிரவு பல கனவு -18 சம்யுக்தாவை அவளது வீட்டுக்கு அருகே இறக்கி விட்ட பிரபாகரன் அவள் வீட்டினுள் சென்ற பின்பும் அங்கேயே நின்றிருந்தான். இன்றைய நிகழ்வுகள் அவனுக்குள் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போதெல்லாம் அவனது தந்தை அடிக்கடி அவனது திருமணம் பற்றிப் பேசுகிறார். அவர்களின் சமூகத்தில்...
  11. S

    அத்தியாயம் - 17

    பகலிரவு பல கனவு - 17 சம்யுக்தா மற்றும் அவளது தந்தையையின் முக பாவனைகளைப் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு முதல் முறையாகத் தனது தோற்றம் பற்றிய கவலை வந்தது. சில நொடிகளே என்றாலும் கண்ணன் அவனை மேலிருந்து கீழாக துளைக்கும் பார்வை ஒன்றைப் பார்த்த போது தன்னிச்சையாக அவனது கை தலைமுடியைச் சரி செய்தது...
  12. S

    அத்தியாயம் - 16

    பகலிரவு பல கனவு - 16 “ஏன் சம்யூ? அப்பா பார்த்தாலும் பரவாயில்லைன்னு தானே நினைக்கிற, அப்புறம் எதுக்கு கொள்ளைக் கூட்டத்தில் இருக்கிற மாதிரி மூஞ்சிய மூடி வச்சிருக்க? காத்து எவ்வளவு ஜில்லுன்னு வீசுது பாரு. அதை என்ஜாய் பண்றத விட்டு இப்படி முகத்தை மூடியிருக்க, நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான்.”...
  13. S

    அத்தியாயம் - 15

    பகலிரவு பல கனவு - 15 “ஹேப்பி பர்த்டே சம்யு!” என்ற பிரபாகரனின் ஆழ்ந்த குரலில் காதில் இருந்த மொபைலை எடுத்து கண்ணைக் கசக்கி உற்றுப் பார்த்தாள். அவனே தான், சரியாக பன்னிரண்டு மணிக்கு அழைத்திருக்கிறான். “பிரபா??? ஹேய் நிஜமாவே நீங்க தானா? தாங்க் யூ ஸோ மச்” என்றவளுக்கு அப்போது தான் அது வீடியோ கால்...
  14. S

    அத்தியாயம் - 14

    பகலிரவு பல கனவு -14 நான்காம் ஆண்டு மருத்துவப் படிப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள் சம்யுக்தா. பிரபாகரனும் தனது வருமானத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொண்டிருந்தான். இருவரும் பார்வையில் மட்டுமே காதல் பேசிக் கொண்டிருந்தனர். அதுவே போதுமானது என்று நினைத்திருந்த சம்யுக்தாவை கல்லூரிக்குள் வலம் வந்த...
  15. S

    அத்தியாயம் - 13

    பகலிரவு பல கனவு - 13 “பிரபாக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்கேன்” முருகானந்தத்தின் வார்த்தைகளில் பெண்கள் மூவரும் அதிர்ந்து நிற்க, பிரபாகரன் அமைதியாகத் தனது உணவை ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். கூடவே காமாட்சிக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தான். “ம்மா! அந்த சிக்கன் வறுவலை...
  16. S

    அத்தியாயம் - 12

    பகலிரவு பல கனவு -12 இரண்டு வருடங்கள் கழித்தும் சரண்யாவின் வார்த்தைகள் இன்னும் சம்யுக்தாவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பிரபாகரனின் குடும்ப பின்னணி பற்றி கவலைப் படாதவளுக்கு அவனது தொழிலைப் பற்றி யோசிக்கும் போதே தலை சுற்றியது. அதற்கேற்ப சரண்யாவும் அப்போது பேசியிருந்தாள். “எனக்கென்னவோ...
  17. S

    அத்தியாயம் -11

    பகலிரவு பல கனவு - 11 சம்யுக்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முழுவதாய் இரண்டு வருடங்கள் கடந்து இருந்தன அவளுக்கும் பிரபாகரனுக்குமான உறவில் பெரிதான முன்னேற்றம் இருந்தது என்று எதுவும் சொல்லி விட முடியாது. அதே நேரத்தில் இந்த உறவு வேண்டாம் என்று இருவருமே நினைக்கவில்லை. இருவருக்குமே அவரவருக்கான...
  18. S

    அத்தியாயம் -10

    பகலிரவு பல கனவு -10 “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே!” என்று டிவியில் சரத்குமாரும் தேவயானியும் பாடிக் கொண்டிருந்தார்கள். பாட்டு முடியும்போது படிப்பு, பணம் என்று எல்லாவிதத்திலும் பல மடங்கு உயர்ந்திருந்தது. பிரபாகரனின் அன்னை காமாட்சியும் அவனது அப்பத்தாவும் திரைப்படத்தில்...
  19. S

    அத்தியாயம் - 9

    பகலிரவு பல கனவு -9 கடை முழுவதும் கண்களால் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த சம்யுக்தா, தேடியது கிடைக்காமல் போனதால் மனம் வாடினாள். அவள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடியப் போகின்றன. இவள் இந்தக் கல்லூரியில் தான் சேரப் போகிறேன் என்று விஷயத்தை பிரபாகரனிடம் சொன்ன போது...
  20. S

    அத்தியாயம் - 8

    பகலிரவு பல கனவு - 8 சம்யுக்தா அமைதியாக அமர்ந்திருந்தாள். தாய், தந்தை, அண்ணன் என்று வீட்டில் யாரும் அவளுடன் பேசுவதே இல்லை. நீட் தேர்வில் தேசிய அளவில் பத்து இடங்களுக்குள் வந்தவளுக்கு டெல்லி எய்ம்ஸ்ல் கூட சீட் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இவளோ அடுத்த தெருவில் இருந்த மெடிக்கல் காலேஜில் தான்...